9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (14:11 IST)
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்புக்கும் பதினோராம் வகுப்பு பள்ளி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் பள்ளிகளில் சானிடைசர் வசதி வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments