Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வந்தது 85,000 டோஸ்கள் கோவாக்ஸின் தடுப்பூசி!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (10:37 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசிகள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது
 
மேலும் தடுப்பூசி கையிருப்பு குறித்த நிலவரத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு அறிவித்து இருந்தும் தமிழக அரசு தினந்தோறும் தடுப்பூசி குறித்த கையிருப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசு ஆர்டர் செய்த 85 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் மத்திய அரசு இன்னும் போதுமான அளவுக்கு தமிழகத்திற்கு தடுப்பூசியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments