Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: இறுதி புள்ளி விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 26 ஏப்ரல் 2014 (19:52 IST)
தமிழகத்தில் கடந்த 24.04.2012 (வியாழக்கிழமை) நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் இன்று உறுதி செய்துள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்த இறுதி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், 39 தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.07% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.4% வாக்குகளும் பதிவாகின. தருமபுரியில் அதிகபட்சமாக 81.58% ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
 
மொத்தம் பதிவான 73.67 சதவீத வாக்குகளில், ஆண்கள் 73.49%, பெண்கள் 73.85%, மூன்றாம் பாலினத்தவர் 12.72% என்ற அளவில் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் 73.67% வாக்குகள் என்பது, கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் 0.69% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

கட்டுக்கடங்காத கூட்டம்.. டிக்கெட் இல்லாமல் மெட்ரோவில் பயணம் செய்த பொதுமக்கள்..!

100 ரூபாயை தாண்டிய தக்காளி விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

சர்வர் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த இந்தியர்கள்.. நிலை மாறிய கனடா..!

இனியாவது தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி எம்பி..!

Show comments