Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்சன் கொலை குறித்து தகவல் கொடுத்தால் 7 லட்சம்!! காவல்துறை அறிவிப்பு

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (10:06 IST)
களியக்காவிளையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குறித்து தகவல் தெரிவித்தால் 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனைச் சாவடியில் பணியற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேரும் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீம், தவ்ஃபீக் ஆகிய இரண்டு பேர் குறித்து தகவல் தெரிவித்தால், 7 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக 70103 63173 என்ற வாட்ஸ் ஆப் எண் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments