Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து: சென்னை காவல்துறை..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:55 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் டிசம்பர் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 6670 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 6,670 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments