Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து 60 ஆயிரம் திருட்டு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:23 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் 60 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடர்கள் நூதன முறையில் பொதுமக்களின் பணத்தை திருடி வருகின்றனர்.
 
இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(30).அவரது மொபைல் போனில் வந்த அழைப்பில், மறுமுனையில் பேசியவர் தான் ஸ்டேட் பேங்கில் இருந்து கூப்பிடுவதாகவும், உங்களின் ஏடிஎம் அட்டை காலாவதி ஆகிவிட்ட காரணத்தால், புது ஏடிஎம் அட்டை வழங்க உங்களது ஏடிஎம் அட்டையின் நம்பரை சொல்லுங்கள் என அந்த போலி வங்கி ஊழியர் கேட்டுள்ளான். இதனை நம்பிய செல்லபாண்டி நம்பரை கூறியுள்ளார். மேலும் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு நம்பர்(OTP) வரும் அதைப் பார்த்து கூறுங்கள் சொல்லியிருக்கிறார். செல்லபாண்டியனும் OTP ஐ கூறியுள்ளார்.
 
அந்த போலி வங்கி ஊழியர் போனை கட் செய்த உடன், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 60000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்லப்பாண்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments