Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவின் 46ஆவது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (10:58 IST)
அண்ணாவின் 46 ஆவது ஆண்டு நினைவு நாள்ளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
 
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா நினைவிடத்துக்கு திமுகவினர் மவுன ஊர்வலம் சென்றனர். காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது.
 
இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் காரில் வந்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நடந்து சென்றனர்.
 
ஊர்வலம், அண்ணா நினைவிடத்தை வந்தடைந்ததும் கருணாநிதி அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அன்பழகன், மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், சற்குண பாண்டியன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா ஒள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments