Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: 43 ரயில்கள் ரத்து..!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (10:17 IST)
ஒடிசாவின் கோரமண்டல ரயில் விபத்து காரணமாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
 நேற்று இரவு முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் கடும் அவதியில் இருப்பதாகவும் தெரிகிறது.
 
மேலும் ரத்து செய்யப்பட்ட ரயிலில்  முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும்  என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments