Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..! விமான நிலையத்தில் பரபரப்பு..!!

Senthil Velan
ஞாயிறு, 2 ஜூன் 2024 (12:43 IST)
சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
 
நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவரது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 
இதில் கருணாஸ் கொண்டு வந்த கைப்பையில் 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், நடிகர் கருணாஸிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ: மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருப்பதாகவும், குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாகவும் விமான நிலைய அதிகாரியிடம் கருணாஸ் தெரிவித்தார். இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments