Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:39 IST)
ஒரே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப மரணம்!
அவிநாசி அருகே இன்று அதிகாலை ஒரே பைக்கில் நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் அந்த பைக் திடீரென விபத்துக்குள்ளாகி பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று அதிகாலை அவிநாசி அடுத்த ஈட்டிவீரம்பாளையம் பைபாஸ் சாலையில் ஒரே பைக்கில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த பைக் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது 
 
இதனை அடுத்து நான்கு பேர்களும் தூக்கி வீசப்பட்டதாகவும் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதியினர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் 4 பேரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் இருப்பதாகவும் படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments