Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடையநல்லூரில் வேன் மோதி 4 இளைஞர்கள் பலி

Webdunia
திங்கள், 27 ஜூன் 2016 (11:41 IST)
கடையநல்லூர் அருகே பைக்கில் சென்ற 4 இளைஞர்கள் வேனில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.


 

 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரையைச் சேர்ந்த சிராஜூதீன், ஷேக், ஆகியோர் பைக்கில் சொக்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதே சாலையில் மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த முத்துநாரயணசாமி, மகாராஜன் ஆகியோரும் பைக்கில் சென்றுள்ளனர்.
 
சாலையில் செல்லும் போது இருதரப்பினருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு சாலையில் முன்னும் பின்னுமாக வேகமாக சென்றுள்ளனர். சாலையில் எதிரே சுற்றுலா பயணிகளோடு வேன் ஒன்று வந்துள்ளது.
 
இவர்களின் சேட்டையால் வேன் டிரைவர் செய்வதறியாது வேனை திருப்ப முயன்றபோது, வேன் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்தவுடன் இரு பைக்குகலும் சென்று வேன் மீது மோதியுள்ளது. அதில் பைக்கில் சென்ற 4 இளைஞர்களும் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் வேனில் இருந்த 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்
Show comments