Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு- திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது !

Webdunia
வியாழன், 5 செப்டம்பர் 2019 (10:37 IST)
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்குப் பல நபர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்து கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சிப் புலிவலம் பகுதியில் உள்ள 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கீழ் சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முத்து மட்டுமல்லாது திமுகவைச் சேர்ந்த பெரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான செல்வ ராஜ் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு இந்த நான்கு நபர்களாலும் வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளன. அவரால் இதை வெளியே சொல்ல முடியாத நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்