Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 33 கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (18:35 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் தமிழகத்தில் இன்று மட்டும் 33 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 1629ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இன்று தமிழகத்தில் 1629ஆக பாதிக்கப்பட்ட 33 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 15 பேர்கள் என்றும் தஞ்சையில் 5 பேர்களும், மதுரையில் 4 பேர்களும், அரியலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா இருவரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் இதனை அடுத்து தமிழகத்தில் இதுவரை 662 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18 என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments