Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (10:14 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் நேற்று காலை தவறி விழுந்து 30 அடி ஆழத்தில் இருந்து மீட்டக்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கள்ளக்குறிச்சி அருகே வசிக்கும் 29 வயதான ராமச்சந்திரன் என்பவரது மகளான 3 வயது  மதுமிதா, அவர்களது வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த  ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள்.
 
வெறும் சாக்கு பையால் மூடப்பட்டிருந்த அந்த 500 அடி ஆழமுள்ள கிணற்றில், குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டாள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
 
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழியை தோண்டிய மீட்பு படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் அதிகாலை குழந்தையை மீட்டனர்.அதன் பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுமி மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments