Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்: 3,793 வழக்குகள் பதிவு

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (11:28 IST)
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 3,793 வழக்குகள் தமிழகத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆனையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோண்டு வந்தது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள், தமிழகத்தில் மார்ச் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
 
அன்று முதல் பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்ததாக பிரவீண்குமார் தெரிவித்தார். அந்த புகார்களின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாவும், மேலும் தமிழகமெங்கும் ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், சட்டவிரோதமாக பேசியதாகவும், கூட்டம் நடத்தியதாகவும் 81 வழக்குகள், பதிவு செய்யப்ட்டுள்ளதாக பிரவீண்குமார் குறிப்பிட்டுள்ளார்.
 
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

Show comments