Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் நாளை 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர் சுப்பிரமணியன்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (17:45 IST)
தமிழக முழுவதும் நாளை 2000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 2000 மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும் காலை 9 மணி முதல் நாளை 4:00 மணி வரை மழைக்கால சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் 100 இடங்களில் நாளை நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 
 
கடந்த ஐந்து வாரங்களில் நடைபெற்ற 10,576 முகாம்களில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 853 பேர் பயன் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments