Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராசிபுரம் குழந்தை கடத்தல்: ஆதாரம் இருக்கு, பிறந்த 20 குழந்தைகள் எங்கே?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (09:12 IST)
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை காசுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்மந்தமான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதன் பின்னர் இந்த வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க துவங்கினர். முதற்கட்ட விசாரணையில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியரும் தரகருமான அமுதா, 2 குழந்தைகளை கொல்லிமலையிலும், ஒரு குழந்தையை சேலம் அன்னதானப்பட்டியிலும் வாங்கியதாகவும் தெரிவித்தார். 
இதன் பின்னர் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் விளைவாக தற்போது கொல்லிமலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் குழந்தைகள் எங்கே என்ற விவரங்கள் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
மேலும் குழந்தைகளை வாங்கிய விவரம், யார் யாரிடம் விற்றார் என்பது பற்றியும் மாவட்ட எஸ்.பி அருளரசு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments