Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட கொடுமையே! அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து 2 பெண்கள் பலத்த காயம்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:00 IST)
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மின்விசிறி கழன்று விழுந்ததில் 2 பெண்கள் பலத்தக் காயமடைந்தனர்.
 

 
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் சிறப்பு பிரிவில் 8 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை சிறப்பு பிரிவில் உள்ள மின்விசிறி ஒன்று எதிர்பாராத விதமாக கழன்று விழுந்தது.
 
இதில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரை காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி அளித்தனர். சிறப்பு பிரிவில் பிறந்து சில தினங்களே ஆன குழந்தைகளும் இருந்தன.
 
ஆனால் அதிர்ஷ்டவசமாக மின்விசிறி குழந்தைகள் மீது படாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments