16 மணி நேரமாக தொடர்ந்து பெய்யும் கனமழை.. வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நாகை மக்கள்..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (11:00 IST)
நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக 16 மணி நேரம் மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர் 
 
நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் மிகுந்த சிரமத்துடன் அலுவலகம் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மேலும் வாகனங்களும் மிகவும் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 சென்டிமீட்டர் மழை பாதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வேளாங்கண்ணியை அடுத்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதிகளின் 12.3 சென்டிமீட்டர் மழையும் கடலூரில் 12 சென்டிமீட்டர் மழையும் பரங்கிப்பேட்டையில் 12 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதை அடுத்து  மீட்பு நடவடிக்கைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments