Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Mahendran
வெள்ளி, 17 மே 2024 (11:06 IST)
சென்னையில் ஓடும் காரில் 15 வயது சிறுமி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட நிலையில் இது குறித்து பொதுமக்கள் காவல்துறையில் புகார் செய்த நிலையில் போலீஸ் விசாரணையில் தடுக்கப்படும் தகவல் தெரிய வந்துள்ளது. 
 
சென்னை தி.நகர் அருகே ஓடும் காரில் திடீரென ஒரு சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார். இதனை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த கார் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காருக்கு உரியவர் மகேந்திரன் என்பதை கண்டுபிடித்தனர்.
 
அவரிடம் விசாரணை செய்தபோது தனது 15 வயது மகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும் காரில் சென்று கொண்டிருந்தபோது தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதை அடுத்து அவரை குடும்பத்தினர் கேலி செய்ததாகவும் அப்போது தனது மகள் விளையாட்டாக தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டதாகவும், இது வேடிக்கையாக தான் நடந்த நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 இதனை அடுத்து பொதுமக்கள் இளம் பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து சாலையில் இதுபோன்ற விளையாட்டுத்தனம் செய்யக்கூடாது என்று மகேந்திரனை எச்சரித்து அறிவுரை கூறிய காவல்துறையினர் அவரை அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments