Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ டிரைவரின் காமவெறிக்கு இரையான 14 வயது சிறுமி: சென்னையில் பயங்கரம்!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (16:32 IST)
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குறிப்பிட்ட நாளில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்காரரான ஆட்டோ டிரைவர் விஜி தாமஸ், சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். 
 
உள்ளே நுழைந்தது, சிறுமியின் கைகளை துப்பட்டாவால் கட்டிபோட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிட்டதால் சிறுமியின் வாயில் சோப் ஆயிலை ஊற்றியுள்ளார். அப்போது சிறுமி நிலை தடுமாறியதால் பயத்தில் ஓடி விட்டார். 
 
பின்னர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிறுமி அளித்த புகாரை அடிப்படையாக வைத்து புளியந்தோப்பு போலீஸார் தலைமறைவாகியுள்ள ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்