Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12வது தேர்வு ரிசல்ட்; வழக்கம்போல பெண்கள் அதிக தேர்ச்சி! - திருப்பூர் முதலிடம்!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (08:58 IST)
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 89.41% தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் வழக்கம்போல மாணவர்களை விட அதிகமாக 94.80% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட அளவிலான தேர்ச்சி பட்டியலில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியை பெற்று தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.99% தேர்ச்சியை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 2120 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதுத்தவிர 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 62 கைதிகளில் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments