10ம் வகுப்பு மாணவரின் உயிரை பறித்த ராகிங்...

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (11:37 IST)
திருச்சி மாவட்டம் நெருஞ்சலக்குடி ஊராட்சியில் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார் ரஞ்சித் என்ற மாணவர். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற ரஞ்சித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 
ரஞ்சித் வீட்டில் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது சாவிற்கு காரணமான 4 மாணவர்களின் பெயரை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் 4 பேர், அவரை தொடர்ந்து அடித்து, ராகிங் செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரஞ்சித் வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்கள் சிலர் ராகிங் செய்து ரஞ்சித்தின் கையை உடைத்தாக பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் 4 மாணவர்களின் தொடர் துன்புறுத்தலால் ரஞ்சித் தற்கொலை செய்துள்ளார். அந்த 4 மாணவர்களை கைது செய்யும் வரை ரஞ்சித் உடலை வாங்கப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments