Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஜெயலலிதா குணமடைய 1008 பேர் முடி காணிக்கை

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:46 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப 1008 பேர் முடி காணிக்கை செலுத்தவுள்ளனர்.


 

 
தமிழக முதல்வர் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவரது உடல்நலம் குணமடைய அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பிராத்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தீச்சட்டி, மண்சோறு போன்ற பிராத்தனைகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருவரங்கம் அதிமுகவினர் சார்பில் திருவரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி கோயிலில் 1008 தொண்டர்கள் முடிகாணிக்கை செலுத்தவுள்ளனர்.
 
இதற்காக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பெரிய அளவில் பேனர் வைத்து அழைப்பு விடுத்துள்ளனர், திருவரங்கம் அதிமுக கழகத்தினர்.

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments