Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தமிழக மக்கள் வருத்தத்தை சம்பாதிக்கிறார் - கருணாநிதி

Ilavarasan
திங்கள், 14 ஏப்ரல் 2014 (15:29 IST)
மோடி தமிழக மக்கள் வருத்தத்தை சம்பாதிக்கிறார் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:–
 
கேள்வி : நேற்றைய தினம் மோடி ரஜினிகாந்த்தை சந்தித்ததைப் பற்றி, ரஜினிகாந்த் அவரை நல்ல நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?
 
பதில் : ரஜினி பேசியதைப் பற்றியோ, அவர் சொன்னதைப் பற்றியோ “நோ கமெண்ட்ஸ்” நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
 
கேள்வி: இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்திருக்கிறீர்கள். அதுபற்றி உங்கள் கருத்து?
 
பதில் : நான் மகிழ்ச்சி அடையத்தக்க அளவிற்கு இருந்தது.
 
கேள்வி : அதிமுக தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் உங்களை சாடிக் கொண்டிருக்கிறார்களே?
 
பதில் : அவர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தோல்வி பயம் அதிகமாகிவிட்டது. ஆகவே எங்களை சாடுகிறார்கள்.
 
கேள்வி : முதன்முதலாக நேற்று தமிழகத்தில் பேசிய மோடி, திமுக–அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சொல்லியிருக்கிறாரே?
 
பதில் : தமிழ்நாட்டில் முதன்முதலாக பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். அப்போது ஒரு அருமையான வாசகத்தை முதன்முதலாக வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வருத்தத்தை சம்பாதிக்க வேறு காரணமே தேவை இல்லை என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments