Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே தொண்டர்கள் விருப்பம்: சரத்குமார்

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (12:05 IST)
சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசியபோது,


 

மதுவிலக்கை படிப்படியாக எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி முதன்முதலில் திட்டம் வகுத்தது சமக. அதைப்போல நதிகளை தேசியமயமாக்குதல் பற்றியும் 15 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் திட்டம் வகுத்தோம்.

நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு கிடையாது. பிரதமராக வேண்டும் என்பதே எனது லட்சியம். தமிழகத்தில் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சி அமைந்தால் எனது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாகத்தான் இருக்கும்.அ.தி.மு.க. கூட்டணியில்  நாங்கள் இருந்தபோது எனது பிரசாரத்தால் 8 சதவீத வாக்கு அதிகரித்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்று கூறினார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments