Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை‌- வாரணாசி‌க்கு புதிய வாராந்திர ரயில் இய‌க்க‌ம்

Webdunia
சென்னை எழும்ப ூ‌‌‌ர்- வாரணாசி இடையே புதிய வாராந்திர ‌ விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைதோறும் இயக்கப்படும் என்று தெ‌ற்கு ர‌யி‌ல்வே அறிவ ி‌த்து‌ள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், சென்னை எழும்பூர்- வாரணாசி- சென்னை எழும்பூர் இடையே புதிய வாராந்திர ‌ விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர்- வாரணாசி (வண்டி எண்: 4259) வாராந்திர ‌ விரைவு ரயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வரு‌ம் 12ஆ‌‌ம் தேதி முதல் வியாழக்கிழமைதோறும் மதியம் 1 மணிக்கு புறப்படும். சனிக்கிழமை காலை 4.50 மணிக்கு வாரணாசி போய்ச் சேரும்.

மறுமார்க்கத்தில், வாரணாசி- சென்னை எழும்பூர் (வண்டி எண்: 4260) வாராந்திர ‌ விரைவு ரயில் வாரணாசியில் இருந்து ஞாயிறுதோறும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயிலில், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி.பெட்டி, ஒரு மூன்று அடுக்கு ஏ.சி.பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகள் உள்ளன.

கூடூர், விஜயவாடா, நாக்பூர், கிட்டார்சி, ஜெபல்பூர், அலகாபாத் வழியாக இந்த ரயில் செல்லும். முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Show comments