Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2016 (04:35 IST)
கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறை வேண்டும் என ஜி.கே.வாசன் வலியறுத்தியுள்ளார்.
இது குறித்து, தாமக தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் சுமார் 1 லட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கிராம தபால் நிலைய ஊழியர்களாக 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கிராம தபால் நிலைய ஊழியர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
 
இதில், கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் 90 சதவீதம் கிராம அஞ்சல் நிலைய ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக, பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும், பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். 7ஆவது ஊதியக் குழுவில் இவர்களது பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பது கவலையில் ஆழ்த்தியுள்ளது.
 
எனவே, கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அதனை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments