Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் - ஜெயலலிதா

Ilavarasan
ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (21:15 IST)
காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது.
 
கர்நாடகாவில் உள்ள காங்கிரசும், பாஜகவும் காவிரி பிரச்சனையில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. காவிரி நதிநீர் பிரச்சனையில் பாஜக,காங்கிரஸ் இரு கட்சிகளுமே துரோகம் இழைத்துள்ளன.
 
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளால் காவிரி பிரச்சனையை தீர்க்க இயலாது. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று பேசினார்.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments