ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் உண்ணாநிலை - பழ.நெடுமாறன் வரவேற்பு
, வியாழன், 1 மார்ச் 2012 (18:06 IST)
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சே கும்பலை விசாரித்து உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த ராஜ பக்சே கும்பலை விசாரித்து உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலும் , மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 6 ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முன்வந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நான் மனமாரப் பாராட்டுகின்றேன். இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் எல்லா இடங்களிலும் பங்கேற்கும்படியும் அவர்களுக்கு வாழ்த்துக்கூறும்படியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளையும் தோழர்களையும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.