Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிட்ட கிரிக்கெட்... டிவி சீரிஸில் தோனி!!

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (12:54 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய அணியின் பல வெற்றிகளும் சாதனைகளுக்கும் காரணமான சில முக்கிய வீரர்களில் தோனியும் ஒருவர். இவர் சமீப காலமாக இந்திய அணிக்காக விளையாடமல் இருந்து வருகிறார். இந்திய தேர்வு அணியும் இவருக்கு பதிலாக தற்போது ரிஷப் பந்தை விக்கெட் கீப்பராக அணியில் சேர்த்து வருகிறது. 
 
இதற்கு இடையில் இந்திய ராணுவத்திலும் இரண்டு வார காலம் தனது சேவையை வழங்கி வந்தார். தற்போது இவர் டிவி சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்கள் தொடர்பாக டிவி சீரியலை தோனி தயாரிக்க உள்ளாராம். 
 
ராணுவ வீரர்களின் வாழ்க்கை, அவர்களின் தியாகம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த சீரிஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதற்காக, தோனி எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாம்.  
 
இந்த நிறுவனம், ஸ்டூடியோநெக்ஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து டிவி சீரிஸை தயாரிக்க உள்ளது. இது சோனி டிவியில் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments