Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1.56 கோடியை ரோட்டில் வீசி சென்ற மர்ம நபர்

1.56 கோடியை ரோட்டில் வீசி சென்ற மர்ம நபர்
, திங்கள், 27 மே 2019 (12:12 IST)
சென்னையில் சாலையில் 1.56 கோடி ரூபாய் பணத்தை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை கொட்டூர்புரம் காவல் சாரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மர்ம நபர் அங்கே பைக்கில் சுற்றி திரிந்திருக்கிறார். அவர்மேல் சந்தேகம் ஏற்படவே அவரை விசாரிக்க அழைத்தபோது வராமல், பைக்கில் வேகமாக தப்பித்து போயிருக்கிறார். உடனே போலீஸார் ஜீப்பில் அவனை வேகமாக துரத்தி சென்றிருக்கின்றனர்.

அப்போது அவன் பைக்கில் வைத்திருந்த சில பைகளை ரோட்டில் வீசியெறிந்துவிட்டு வேகமாக சென்றுவிட்டான். அந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது அதில் சுமார் 1கோடியே 56 லட்சம் பணம் இருந்திருக்கிறது. தப்பி சென்ற அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவைத் தேர்தலில் தோல்வி : தனிக்கட்சி தொடங்கும் பிரபல நடிகர்