Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடையே...! கோடையே...!

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (14:44 IST)
கோடையே!
நான் விரும்பும்
கோடையே!
நீ
சுட்டெரிக்கும் வெப்பம்
மட்டும்தான்
என்று
உலகம் நினைத்துக் கொண்டிருக்கின்றது.
 
நிஜம்
சொல்கிறேன்
கேள்!
 
கோடையே...
உன்னால்தான்
மழையை
மனம் விரும்புகிறது.
 
நினைத்துப் பார்
நீ மட்டும்
இல்லையென்றால்
மழையை
யார் விரும்புவார்?
 
தென்றலைத்
தேடவைப்பது யார்?
நீ தானே...
 
உன்னைக் கண்ட பின்புதானே
பனிக்கட்டியின்
நினைவு வருகின்றது.
 
இருட்டில் இருந்த
இலையுதிர் காலத்திற்கு
வெளிச்சத்தை கொடுத்த கோடையே!
 
எனக்கு மட்டும்
நீ
இதமாய்தான் இருக்கிறாய்.
கோடை என்றவுடன்
நினைவுக்கு வருவது
விடுமுறை மட்டுமல்ல
இன்பச் சுற்றுலாவும்தான்.
 
என்
வசந்த காலத்தை
நான்
நினைவுபடுத்துகையில்
அது என்
இறந்துபோன
கோடை
விடுமுறைதானே!...
 
 
- த.நா. பரிமளச்செல்வி
 
(என் ஏழு ஜென்மங்கள் என்ற கவிதை தொகுப்பிலிருந்து...)

வெந்தய பொடியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

உடலுக்கு நன்மை தரும் சுவையான ராகி பாயாசம் செய்வது எப்படி?

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

Show comments