தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர், காயல் பட்டிணம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், பண்டார விளை, செபத்தையாபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் நேற்று பிரசாரம் செய்தார்.
பின்னர் இரவு தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பிரசார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சித்து பேசி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் இதுவரை பாரதிய ஜனதாவை விமர்சிக்கவில்லை? என கடந்த 3 நாட்களாக நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை.