Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் ரெடி

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2014 (15:47 IST)
பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, போட்டியிடும் தொகுதிகளை மட்டுமின்றி வேட்பாளர்களையும் இறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
FILE

காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் நிபந்தனையின்றி சேருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு முன்னரே பாஜகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் வைகோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதில் சில தொகுதிகளை பாமக, பாஜக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மதிமுக குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதுடன் வேட்பாளர்களையும் இறுதி செய்து வைத்திருப்பதாக தெரிகிறது.

விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் கணேசமூர்த்தி இதன்படி விருதுநகரில் வைகோ, தூத்துக்குடியில் ஜோயல், பொள்ளாச்சியில் ஈஸ்வரன், ஈரோட்டில் கணேசமூர்த்தி எம்.பி., காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா, திருச்சியில் திருமதி ரொக்கையா ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments