Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை இன்று முற்றுகை

Webdunia
திங்கள், 18 மார்ச் 2013 (10:18 IST)
FILE
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளனர்

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சவை, போர்க்குற்றவாளி என அறிவிக்கக்கோரி, நான்காவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர் தருமரி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள். அவர்களில், 15 பேரின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் தனி ஈழம் அமையும் வரை போராட்டம் ஓயாது என மாணவர்கள் கூறியுள்ளனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments