Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா தங்கள் இஷ்டம் போல் செயல்படக் கூடாது - நாராயணசாமி

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2012 (16:45 IST)
FILE
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படியும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாமல் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவது சரியல்ல என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சென்னை வந்த நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் 19ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில், கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் உள்ளது. தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளனர். அதற்கான நடவடிக்கை பிரதமர் எடுப்பார்.

தவிர, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் தங்கள் இஷ்டப்படி செயல்படுவது சரியான செயல் அல்ல என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments