Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌‌க்கு சீ‌ல் வை‌த்தது த‌மிழக அரசு

மதுரை ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌‌க்கு சீ‌ல் வை‌த்தது த‌மிழக அரசு
, வெள்ளி, 6 ஜூலை 2012 (14:41 IST)
மதுரை‌யி‌ல் ஓரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட இரு‌ந்த ஈ‌ஸ்வர‌ா எ‌ன்ற த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌க்கு த‌மிழக அரசு ‌திடீரென ‌‌சீ‌ல் வை‌த்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை த‌ல்லாகுள‌த்‌தி‌ல் பல கோடி ரூபா‌ய் செல‌வி‌ல் டா‌க்ட‌ர் ‌ஜி.எ‌ம்.பர‌த்குமா‌ர் எ‌ன்பவ‌ர் ‌‌பிரமா‌ண்டமான மரு‌த்துவமனை க‌ட்டியு‌ள்ளா‌ர். இ‌ந்த மரு‌த்துவமனை ஓ‌ரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட உ‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மாநகரா‌ட்சி‌யி‌ன் உ‌‌ள்ளூ‌ர் ‌தி‌ட்ட‌க்குழு‌வி‌ட‌‌ம் அனும‌தி பெறாம‌ல் 6 மாடி க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டதாக புகா‌ர் எழு‌ந்ததையடு‌த்து மரு‌த்துவமனை‌யை ‌சீ‌ல் வை‌‌க்க கலெ‌க்ட‌ர் உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இதையடு‌த்து, ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌க்கு இ‌ன்று ச‌ெ‌ன்ற மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ள் ‌சீ‌ல் வை‌த்து பூ‌ட்டின‌ர். மேலு‌ம் ‌ஸ்கே‌ன், எ‌க்‌‌ஸ்ரே கரு‌விகளை அறை‌யி‌ல் வை‌த்து பூ‌ட்டிய ‌அ‌திகா‌ரிக‌ள், க‌ட்டுமான பொரு‌ட்க‌ள், சாதன‌ங்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil