Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவாணி அணை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சிறுவாணி அணை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
, வியாழன், 21 ஜூன் 2012 (13:55 IST)
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட எடுத்த முடிவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்திருப்பதை அனுமதிக்க கூடாது.

மத்திய நீர் ஆணையம் அத்திட்டத்திற்கு தொழில்நுட்ப அனுமதி அளிக்க கூடாது என பிரதமர் அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் குடிநீருக்காக அந்த ஆற்றினையே சார்ந்துள்ளனர்.

கேரள அரசின் இந்த முடிவால் அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil