கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே கோ-ஆப்டெக்ஸ் உள்ளது. மேலும், அந்த இடத்தில் சில கடைகளும் உள்ளன.
இந்நிலையில், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அதனருகே உள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நான்கிற்கும் அதிகமான தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.