தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் குறித்து மாநில முதல்வர்களிடம் மத்திய அரசு உடனடியாக கலந்தாலோசனை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவை மாநில அரசுகளின் கைகளில் இருக்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக மாநிலங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மற்ற முதல்வர்களுக்கும் இது குறித்து வலியுறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.