காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு்ள்ளது
இது தொடர்பாக போக்குவரத்து காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் முதல் காந்தி சிலை வரை பொது மக்கள் சாலையில் முழுவதுமாகக் கூடும்வரை எந்த போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது.
உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் கூடும் போது காந்தி சிலையில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் டாக்டர்.ராதாகிருஷ்னன் சாலையில் திருப்பப்பட்டு ராயபேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி. ரோடு, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி பாயின்ட், குளு சாலை வழியாக ராஜாஜி சாலையை வந்தடையலாம்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் வாகனங்கள், அதாவது போர் நினைவுச் சின்னத்திலிருந்து அடையாறு நோக்கி வரும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னத்தில் திருப்பப்பட்டு பிளாக் ஸ்டாப் ரோடு , அண்ணாசாலை, பட்டுள்ளாஸ் ரோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராமகிருஷ்ணா மடம் ரோடு வழியாக அடையாறு வந்தடையலாம்.
காந்தி சிலைக்கு அருகில் சாலையில் முழுவதுமாக பாதசாரிகள் நிரம்பும் பட்சத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் ரோடு, மந்தவெளி சந்திப்பு, லஸ் கார்னர், ராயப்பேட்டை 1 பாயின்ட், ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி. ரோடு, அண்ணாசாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் லைட் பாயின்ட், ஈ.வே.ரா சாலை, தெற்கு மின்ட் சாலை, ஈவினிங் பஜார் சாலை, என்.எஸ்.சி போஸ் ரோடு வழியாக ராஜாஜி சாலையை வந்தடையலாம்.
வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக போக்குவரத்து காவல் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.