கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு சிறப்பாக உள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்டு அணு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இதனை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அணுமின் நிலையம் கூடங்குளத்தில் இருப்பது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் அப்துல் கலாம் கூறினார்.
கூடங்குளம் மக்கள் 40க்கும் மேற்பட்டோரை சந்தித்தாகவும், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அடிப்படையானது என்று கூறிய கலாம், விஞ்ஞானி - தொழில்நுட்பவாதி என்ற அடிப்படையிலும் அணுமின் சக்திக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.