''மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆகஸ்ட் 1 ஆம் தேதி தி.மு.க நடத்த திட்டமிட்டுள்ள போராட்டம், திட்டமிட்டபடி நடக்கும்; அதை யாரும் தடுத்திட முடியாது என்றார்.
காவல்துறையினரின் இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து தி.மு.க போராடும்; அதுவும் ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தொண்டர்கள் போராடுவர் என்று கருணாநிதி தெரிவித்தார்.