Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2011 (13:41 IST)
'' பேராசிரியர ் சிவதம்பியின ் மறைவ ு தமிழ ் உலகிற்க ு ஈடுசெய் ய முடியா த இழப்பாகும ்'' எ‌ன்று த ி. ம ு.க. தலைவர ் கருணாநித ி இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள இரங்கல ் செய்தியில ், பேராசிரியர ் கார்த்திகேச ு சிவதம்பியின ் மறைவ ு செய்த ி அதிர்ச்சிய ை தந்தத ு. 79 வயதா ன பேராசிரியர ் சிவதம்ப ி கடந் த சி ல நாட்களாகவ ே உடல ் நலிவுற்றிருந்த ு நேற்றிரவ ு மறைந்திருக்கிறார ்.

பேராசிரியர ் க ா. சிவதம்ப ி தமிழ்மொழ ி, இலக்கியத்தில ் ஆழ்ந் த புலம ை கொண்டவர ். திறனாய்வாளர ், சமூ க வியலாளர ், அரசியல ் சிந்தனையாளர ், பல்துற ை புலம ை கொண்டவர ்.

இங்கிலாந்த ு, பின்லாந்த ு, ஜெர்மன ி என்ற ு ப ல நாடுகளிலும ் பணியாற்ற ி பெரும ை சேர்த்தவர ். எட்டாவத ு தஞ்ச ை உலகத ் தமிழ ் மாநாட்டில ் கலந்த ு கொள் ள வந் த பேராசிரியர ் சிவதம்ப ி திருப்ப ி அனுப்பப்பட்டார ் என் ற அநீதிக்க ு பரிகாரமா க 2000 ஆம ் ஆண்டில ் த ி. ம ு.க. அரச ு அவருக்க ு “திர ு. வ ி.க. விருது ” வழங்கியத ு.

அண்மையில ் கோவையில ் நடந் த உலகத ் தமிழ்ச ் செம்மொழ ி மாநாட்டில ் ஆய்வரங் க குழுவிற்க ு தலைம ை பொறுப்ப ு வழங்க ி த ி. ம ு.க. அரச ு அவர ை சிறப்பித்தத ு. செம்மொழ ி மாநாட்டில ் கலந்த ு கொள் ள தனத ு உடல ் நிலையையும ் பொருட்படுத்தாமல ் இலங்கையில ் இருந்த ு பெங்களூர ் வர ை விமானத்தில ் வந்த ு அங்கிருந்த ு கோவைக்க ு காரிலேய ே வந்த ு சென்றார ்.

மாநாட ு முடிந்த ு அவர ் விடைபெறும ் முன ் என ் அறைக்க ு தேட ி வந்த ு கைகளைப ் பிடித்த ு கண்ணீர ் மல் க நன்ற ி சொன்னார ். 70 க்கும ் மேற்பட் ட நூல்களையும ், 200 க்கும ் மேற்பட் ட கட்டுரைகளையும ் எழுத ி உல க அறிஞர்களால ் போற்றப்பட் ட பேராசிரியர ் சிவதம்பியின ் மறைவ ு தமிழ ் உலகிற்க ு ஈடுசெய் ய முடியா த இழப்பாகும ். அவர ை பிரிந்த ு வருந்தும ் அவரத ு துணைவியார ் ரூபாவத ி சிவதம்பிக்கும ், அவரத ு மகள்களுக்கும ் குடும்பத்தாருக்கும ் எனத ு ஆறுதலையும ், இரங்கலையும ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார ்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments