Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு: விசாரணைக் குழு நியமனம்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (20:17 IST)
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், சென்னை அண்ணா சிலை அருகேயுள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்ததோடு, கடந்த மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே தலைமை செய்லகத்தை மீண்டும் பழைய ஜெயின்ட் சார்ஜ் கோட்டைக்கே மாற்றிவிட்டார்.

அத்துடன் புதிய தலைமைச் செயலகம் செயல்பட்ட கட்டிடம், வேறு ஏதாவது அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, 3 மாத காலத்திற்குள் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments