Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது: சீமான்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2011 (13:36 IST)
FILE
சென்ன ை வர்த்தக மையத்தில் வரும் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இல்ல உள்வடிவமைப்ப ு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் எதையும ் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து சீமான் விடுத்துள்ள அறிக்க ை வருமாற ு:

“சென்ன ை நந்தம்பாக்கத்தில் தொழில ், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்த க மையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும ் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21 st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Décor Accessories) நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந் த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.

21 வத ு ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர ், மலேசிய ா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்ற ு கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில ் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில ் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று குவித் த அந்நாட்டு அரசுத் தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும ், ஈழத ் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைய ை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில ் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில ், தமிழ் மண்ணில் நடைபெறும ் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப ் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும ், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும ் அவமதிப்பதாகும்.

எனவ ே, சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும ் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட் ட எந்த பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறச்செய்யவும் அனுமதிக்கக் கூடாத ு என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

எங்களின ் வேண்டுகோளையும் மீற ி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்க ு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும் என்பதைத ் தெரிவித்துக்கொள்கிறோம ்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Show comments