ஈழத் தமிழர்களுக்காக தமிழக பொறியாளர் தீக்குளிப்பு
, செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (13:29 IST)
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சங்கரன்கோவிலில் பொறியாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சீகம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி. ராஜஸ்தானில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணமூர்த்தி வாக்களிப்பதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.இந்த நிலையில் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி நேற்று தீக்குளித்துள்ளார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி இன்று காலை உயிரிழந்தார்.அப்போது, கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார். அதில், அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்றும் கடிதத்தில் எழுதியுள்ளார்.இது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் பெற்றோர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவித்துள்ளனர். உடனே அவர் இன்று காலை சீகம்பட்டியில் உள்ள கிருஷ்ண மூர்த்தி வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.