தமிழக அரசின் சம்பள உயர்வு அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அய்யப்பன் என்பவர் இந்த வழக்கை இன்று தாக்கல் செய்துள்ளார்.
தாசில்தார், காவல்துறை, அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்தை உயர்த்தி பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார்.
தேர்தலை கருத்தில் கொண்டே அதிகாரிகளின் சம்பளத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதாகவும் வழக்கறிஞர் அய்யப்பன் மனுவில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவதை தடுக்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்வதாகவும், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.