சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை கிலோ ஒன்றிற்கு 45 ரூபாயாக குறைந்துள்ளது.
அண்மையில் பெய்த கனமழையால் காய்கறி விலைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் விலை ஏறுமுகமாக இருந்தது.
இதில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்ததால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
கடந்த வாரத்தில் கிடு கிடு என உயர்ந்த வெங்காயத்தின் விலை 2 நாட்களாக குறையத் தொடங்கியது. கடந்த 21 ஆம் தேதி கிலோ 80 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் விலை, நேற்று 55 ரூபாயாக குறைந்தது.
இன்று காலை மேலும் 10 ரூபாய் குறைந்து 45 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.